.

Tuesday, February 20, 2018

பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கிளை மாநாடு

            06-02-2018 அன்று உளுந்தூர்பேட்டை தொலைபேசி நிலையத்தில் தோழர் P.மனிபாலன் கிளைத் தலைவர் தலைமையில்  தோழர் M. நாராயணன் பணி ஓய்வு பாராட்டு விழாவும்  மற்றும் கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.    தோழர் M. நசீர் பாஷா வரவேற்புரையாற்றினார். தோழர் V.லோகநாதன் மாநிலச் சங்க சிறப்பு அழைப்பாளர்   தனக்கே உரிய பாணியில் துவக்க உரையாற்றினார்.
        தோழர் R.செல்வம் மாநில பொதுச் செயலர் TMTCLU சிறப்புரையாற்றினார். தோழர் இரா.ஸ்ரீதர்  பணி ஓய்வு பெறும் தோழர் நாரயணன் அவர்களை பாராட்டியும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை நிர்வாகிகளை வாழ்த்தியும்  நிறைவுரையாற்றினார். இறுதியில் தோழர் P.முத்துவேல் நன்றி கூற கூட்டம் இனிதே  முடிவுற்றது.
தோழர்கள் V.இளங்கோவன், P.அழகிரி, S.ராஜேந்திரன், S.மணி, B.கிருஷ்ணமூர்த்தி,  மூத்த தோழர்கள் S.குருராஜன், L.ஜெகனாதன்,  D.மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர் நாராயணன் மாவட்ட சங்கத்திற்கு ரூ 1000/- நன்கொடை வழங்கினார்.
        புதிதாக தோழர்கள் A.ராமன்,  .T.கோவிந்தசாமி,  P.செல்வி ஆகியோர் தலைவர் , செயலர் , பொருளர் முறையே தேர்வு செய்யப்பட்டனர். தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்..





No comments:

Post a Comment