.

Saturday, December 16, 2017

விருத்தாசலம் கிளை மாநாடு-15.12.2017
            விருத்தாசலம் கிளை மாநாடு மற்றும் தோழர் T. அருள்லாரன்ஸ் அந்தோணிராஜ், தோழர் B.வீரமணி ஆகியோர் பணி ஓய்வு பாராட்டுவிழா 15.12.2017 அன்று கிளைத்தலைவர் தோழியர் P.கற்பகவள்ளி தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலரும், மாநில சங்க உதவிச்செயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி துவக்கவுரையாற்றினார். மாவட்டசெயலர் தோழர் இரா.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். 
    புதியகிளை நிர்வாகிகளாக தோழியர் P.கற்பகவள்ளி தலைவராகவும், தோழர் B.கிருஷ்ணமூர்த்தி செயலராகவும், தோழர் V.அருள்செல்வம் பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
புதிய நிர்வாகிகளுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.




No comments:

Post a Comment