.

Thursday, September 28, 2017

கடலூர் பணிஓய்வு பாராட்டு விழா-27.9.2017
கடலூர் GM அலுவலகக்கிளை சார்பில் 30.9.2017 அன்று பணி ஓய்வு பெறும் தோழர்கள் K.ஜெயராமன், C.S.சேகர் மற்றும் தோழியர் V.வசந்தி ஆகியோருக்கு பாராட்டு விழா 27.9.2017 மதிய உணவு இடைவேளையில் கிளைத்தலைவர் தோழர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தோழர் P.ஜெயராஜ் வரவேற்றார். பணிஓய்வு பெறும் தோழர்களை தோழர் E.விநாயகமூர்த்திதோழர் AC.முகுந்தன், தோழர் D.குழந்தைநாதன், தோழர் A.சாதிக்பாஷா, தோழர் R.செல்வம், தோழர் V.இளங்கோவன் மற்றும் தோழியர் V.கீதா ஆகியோர் பாராட்டிப் பேசினர். பின்னர் கிளையின் சார்பில் பணிஓய்வு பெரும் தோழர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.   

மேலும், மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். (தோழரது முழு சிறப்புரை கீழே இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார். கிளைத்தோழர் AS.குருபிரசாத் நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த கிளைச்செயலர் தோழர்.S.இராஜேந்திரன் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.






No comments:

Post a Comment