.

Wednesday, August 31, 2016

புதுவைத் தோழர் செல்வரங்கம்
பணி நிறைவு


 1974 மைசூரில் நடைபெற்ற சம்மேளனகூட்டத்தில்  மஸ்தூர்களை NFPTE இயக்கத்தில் இணைத்துக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இந்தியாவிலேயே கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தோழர் ஜெகன் தலைமையில்  மஸ்தூர் கிளை சங்கம் துவக்கப்பட்டது. அதன் முதல் கிளை செயலராக தோழர் M.செல்வரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்று பணி நிறைவு வரை தொடர்ந்து சங்கப்பணியில் பணியாற்றிய தோழர் நிரந்தர ஊழியர்களின் செயலராக, மாவட்ட உதவி செயலராக புதுவையில் பல்வேறு தோழர்கள் மாவட்ட செயலர்கள் பணியாற்றிய காலத்திலேயே அவர்களுக்கு உறுதுணையாக புதுவையில் இயக்கத்தை கட்டியமைத்த தோழர்களில் முதன்மையானவர். சங்கத்தைத் தாண்டி மனித நேயத்தோடும் பல்வேறு தோழர்களுக்கு உதவி புரிந்த தோழர் செல்வரங்கம். இலாக்கப் பணியிலும் எந்த அதிகாரியும் குறை சொல்ல இயலாத அளவிற்கு செயல்பட்ட தோழர்.
NFTE சங்கத்தின் புதுவை மாவட்ட செயலராக 2015-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு    திறம்பட பணியாற்றிவருகிறார். அவரது பணி மேலும் சிறக்க கடலூர் மாவட்டசங்கம் வாழ்த்துகிறது.






     
31.08.2016 இன்று பணி நிறைவு பெறும் 
தோழர்கள்/தோழியர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

                          தோழர் N.உத்தண்டி TT அவலூர்பேட்டை
                          தோழியர் B.சரோஜா OS சிதம்பரம்
                          தோழர் M.ஆறுமுகம் TT முருக்கேரி
                          தோழர் A.மகாலிங்கம் OS காட்டுமண்ணார் கோயில்
                          தோழியர் M.ராஜேஸ்வரி OS GMO கடலூர்

Saturday, August 27, 2016



செப்டம்பர்-2 பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக்கூட்டம்
   செப்டம்பர்-2 பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக்கூட்டங்களை கடலூர் மாவட்டத்தில் BSNLEU   சங்கத்துடன் கூட்டாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் 24.08.2016 புதன்கிழமை தொடங்கி பல்வேறு கிளைகளில் நடைபெற்றது.
 24.08.2016 காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் நமது மாநில துணைத்தலைவர் தோழர்.வீ.லோகநாதன், மாநில அமைப்பு செயலர் தோழர் P.பாலமுருகன் மற்றும் BSNLEU மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை,BSNLEU மாவட்ட செயலர் தோழர் KT.சம்மந்தம் ஆகியோர் பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் துவக்க உரையாற்றினார்.


24.08.2016 மதிய உணவு இடைவேளையில் நெய்வேலியிலும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை விருத்தாசலத்தில் நடைபெற்ற பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டத்திலும் நமது மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் மற்றும்  BSNLEU சங்க மாநில மாநில அமைப்பு செயலர் தோழர் M.முருகையா, மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை ஆகியோர் பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
விருத்தாச்சலம் 
 நெய்வேலி 

25.8.2016 காலை விழுப்புரத்திலும், மதியம் திண்டிவனத்திலும், அன்று மாலை செஞ்சியிலும் நடைபெற்ற பொது வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் நமது மாநில உதவிசெயலர் தோழர் P.சென்னகேசவன், மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் N.அன்பழகன், மாவட்ட தலைவரும் TMTCLU மாநில பொதுச்செயலருமான தோழர் R.செல்வம் மற்றும்  BSNLEU சங்க மாநில உதவிசெயலர் தோழர் R.V.ஜெயராமன், மாநில அமைப்பு செயலர் தோழர் முகமது ஜாபர் ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர்.

                                         விழுப்புரம் 

திண்டிவனம் 

செஞ்சி 


26.08.2016 காலை பண்ருட்டி, மதியம் உளுந்தூர்பேட்டை, மாலை கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற  வேலைநிறுத்த கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் V.இளங்கோவன் மற்றும்  BSNLEU சங்க மாநில மாநில அமைப்பு செயலர் தோழர் M.பாபு, மாநில துணைத்தலைவர் தோழர் A.அண்ணாமலை ஆகியோர் பொது வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர்.
                                              
                                               பண்ருட்டி 

உளுந்தூர்பேட்டை 

கள்ளக்குறிச்சி 



   

Monday, August 22, 2016






ஆறிலே...... ஒன்றும்...... ஆயிரத்திலே.. ஒன்றும்..



பிரதமர் மோடிக்கு
கைப்பந்து வீராங்கனை
பூஜா  
கடைசியாக எழுதிய கடிதம்


உலகில் ஆறில் ஒருவன் இந்தியன்...
ஒலிம்பிக்கில் ஆயிரத்தில் ஒருவன் இந்தியன்...

உலக மக்கள் தொகை 735 கோடி...
இந்திய மக்கள் தொகை 130 கோடி...

ஒலிம்பிக்கில் மொத்தப் பதக்கங்கள்  2102...
இந்தியா பெற்ற பதக்..கங்கள்  வெறும்  2...
கடைசி இலக்கத்தை எப்படியோ..
கணக்காய்ப் பெற்று விட்டோம்...

140 கோடிப் பேரைப்  பெற்றெடுத்த  சீனா பெற்றது 70...
130 கோடிப் பேரைப் பெற்றெடுத்த  இந்தியா பெற்றது 2..

2016 போனால் போகட்டும்...
2020 ஒலிம்பிக்கில்...
சத்தியமாக சீனாவை முந்திவிடுவோம்...
பதக்க வீரர்களாக அல்ல... பாலூட்டிகளாக...

சிந்துவிற்கும்... சாக்ஷிக்கும்  கோடிகள் குவிகிறது...
ஏதோ ஒரு கோடியில்...
பஞ்சாபில் வாழ்ந்த கைப்பந்து வீராங்கனை..
பூஜா உடலில் வெள்ளைக்கோடி இறுதியாக வீழ்கிறது...

பூஜா தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை...
விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல்
விடை பெற்றுச் சென்று விட்டார்...

இது கூஜாக்களின் தேசம்...
பூஜாக்களுக்கான தேசமல்ல...

தனது நிலை யாருக்கும் வேண்டாம் என...
பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...
பூஜா எமனிடம் போய்ச் சேர்ந்து விட்டார்...

பெற்ற  இரண்டு பதக்கங்களை விட..
பிரிந்து விட்ட ஒரு உயிர்...
நம் நெஞ்சை வதைக்கிறது...

இந்த தேசம் வெற்றி பெற்றவனை மட்டுமே
தலையில் வைத்துக் கூத்தாடும்...

திறமை இருந்தாலும்... நேர்மை இருந்தாலும்..
எளியவனைத்  தரையில் போட்டுப் பந்தாடும்...

அரசியல் விளையாட்டாகிப்போன தேசமிது...
விளையாட்டும் அரசியலாகிப்போன நாசமிது...

நேர்மையும்... திறமையும்.. என்று மதிக்கப்படுகிறதோ...
அன்றுதான் இந்த தேசத்தின் தலை நிமிரும்...
பாதகங்கள் அகலும்... பதக்கங்கள் குவியும்...

அதுவரை பூஜாக்கள் கதை தொடரும்...

                                                                                                      _ நன்றி கரைக்குடி வலைதளம்

Tuesday, August 16, 2016

வருந்துகிறோம்!!
ஓய்வு பெற்ற மூத்தத் தோழர் K.செல்வராஜ் STS-கடலூர் அவர்களின் தந்தை நேற்று (15.08.2016) இரவு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை (16.08.2016) மாலை 4-மணியளவில் நெல்லிக்குப்பம் அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.   

Friday, August 12, 2016

தர்ணா-12.08.2016
  
    NFTE-BSNL,SEWA(BSNL),PEWA,TEPU மத்திய சங்கங்கள் இணைந்த தேசிய கூட்டமைப்பு ஆகஸ்ட்’12 அன்று ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய தர்ணா நடத்திட அழைப்பு விடுத்தது. கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று கடலூர் மாவட்ட கூட்டமைப்பு அமைக்கப்பட்டு இன்று காலை 9.30 மணி முதல்  மாலை  5.30 வரை கூட்டமைப்பு தலைவர் தோழர் S.வாசுதேவன்-SEWA(BSNL) தலைமையில் கடலூர் GM அலுவலக வாயிலில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட தேசிய கூட்டமைப்பு கன்வீனரும் மாவட்ட செயலருமான தோழர்இரா.ஸ்ரீதர் வரவேற்புரை நிகழ்த்தினார். நமது மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் துவக்கவுரை உரையாற்றினார்.

    கோரிக்கைகளை விளக்கி நமது மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம், PEWA மாவட்ட செயலரும், கூட்டமைப்பின் இணைச்செயலருமான தோழர் V.நல்லத்தம்பி, மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் V.இளங்கோவன், தோழர் N.அன்பழகன், மாவட்ட உதவிசெயலர்கள் தோழர் D.ரவிச்சந்திரன், தோழர் D.குழந்தைநாதன், மூத்தத் தலைவர் தோழர் S.தமிழ்மணி மற்றும் சிரில் அறக்கட்டளைத் தலைவர் தோழர் K.சீனிவாசன் ஆகியோர் பேசினர்.

       தோழமை சங்க நிர்வாகிகள் AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் S.ஆனந்த், ஓய்வூதியர் நலசங்க(AIBSNL PWA) கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் K.இளங்கோவன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கடலூர் மாவட்ட FNTO மாவட்ட செயலர் தோழர் R.ஜெயபாலன் உடல்நலக்குறைவினால் கலந்து கொள்ளவில்லை. நிறைவாக மாநில உதவிசெயலர் தோழர் P.சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார். கடலூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் P.அழகிரி நன்றியுரையாற்றினார்.

      தர்ணா போராட்டத்தில் மாவட்ட முழுமையும் இருந்து அனைத்து கிளைகளிலிருந்தும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் திரளாக கலந்து கொண்டது சிறப்பாகும்.        






Thursday, August 11, 2016

மாவட்ட செயற்குழுக் கூட்டம்
சிறப்புகள் பல கொண்ட செம்மையான செயற்குழு

மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் குறித்த நேரத்தே துவங்கியது.
அனைத்து கிளைச் செயலர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றது.
வேலூரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர், மாநிலச் செயலர், மாநில பொருளாளர், மாநில அமைப்புச் செயலாளர் இவர்களோடு நமது மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நால்வர் ஒருங்கே என பங்கேற்றது.
வேலூரில் சூல் கொண்ட ஒற்றுமை கடலூரில் மலர்ந்து மணம் வீசியது.
அனைத்துக் கிளைச் செயலர்களும் TM சுழல் மாற்றல், ஆகஸ்ட் 12 கூட்டமைப்பு தர்ணா, தங்கள் பகுதிப் பிரச்சனைகள் என சுருக்கமாக தெளிவாக கூறியது.
தர்ணா கோரிக்கைகளைப் பற்றி மாநிலத் தலைவர் தோழர் P. காமராஜ் தமது துவக்க உரையில் விளக்கமாக எடுத்துரைத்தது.
செயற்குழுவிற்கு முதல் நாள் விபத்தில் அகால மரணமடைந்த சிதம்பரம் தோழர் G. பாண்டியன் மற்றும் நமது தலைவர் அண்ணாச்சி D ரெங்கநாதன், திரைத்துறைக் கலைஞர் பஞ்சு அருணாசலம், எழுத்தாளர் வே. சபாநாயகம், கவிஞர் ஞானக் கூத்தன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேகமாக ஆனால் எதையும் விட்டுவிடாதவகையில் சென்ற மாவட்டச் செயற்குழுவிற்கு பிறகு நிகழ்ந்த அனைத்து மாவட்ட செய்திகளையும் தொகுத்து மாவட்டச் செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் அவர்களின் அறிமுக உரை.
ஆகஸ்ட் 12 தர்ணாவில் விரிவாகப் பேசலாம் என தங்கள் வாழ்த்துரையை சுருக்கிக் கொண்ட மாநில சங்க சிறப்பு அழைப்பாளர்கள் தோழர் என். அன்பழகன், தோழர் V. இளங்கோ மற்றும் தோழர் V. நல்லதம்பி (PEWA) ஆகியோரின் சீரிய சிற்றுரை.
ஸ்ரீதரின் அணுகுமுறையை வரவேற்று வாழ்த்துரைத்த புதிய மாநில உதவிச் செயலர் நமது தோழர் P.சுந்தரமூர்த்தி மற்றும் மாநில துணைத்தலைவர் நெய்வேலி V. லோகநாதன் ஆற்றிய வாழ்த்துரை.
இவர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பில் கைத்தறியாடை அணிவித்து மரியாதை செய்த நமது முன்னணித் தோழர்கள்

முற்பகல் சமோசா தேனீர் போலவே நல்ல மதிய உணவு 
நமது மூத்த தலைவர் எஸ். தமிழ்மணி, மாநில அமைப்புச் செயலராக வேலூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தோழர் பாலமுருகனின் நறுக்கான தெறிப்பு பேச்சு
புதிய மாநிலச் பொருளாளர், கோவையின் மாவட்டச் செயலாளர் தோழர் எல்.சுப்புராயனின் அனுபவம் சார்ந்த ஒற்றுமையை உயர்த்திப் பிடித்து புதிய நிர்வாகிகளில் பெரும்பாலனோர் மாநிலச் செயலர் போல இளைஞர்கள் என்பதில் பெருமகிழ்வு கொண்ட நெஞ்சில் நின்ற சிறப்புரை
புதிய மாநிலச் செயலர், இளைஞர் அடிமட்டத்திலிருந்து உழைத்து உயர்ந்த போராளி, தஞ்சை மண்ணின் வித்து, நமது மாவட்டத்திற்கு மாப்பிள்ளை தோழர் கே. நடராஜன் அவர்களின் நகைச்சுவை மிளிர்ந்த உற்சாக உரை
இதனோடு கூட இன்னொரு மட்டை விளாசல் இன்னிங்ஸ் என மாவட்டச் செயலரின் தன்னம்பிக்கை மிகுந்த பொறுப்பான தொகுப்புரை.  மாவட்ட சங்க செயல்பாடுகளின் மீது மாவட்ட இணைய தளத்தின் எழுத்து குறித்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள்அதனைத் தன்னிடம் நேராக அல்லது அமைப்பின் கூட்டங்களின் வாயிலாகஏனெனில், மாவட்டச் செயலரின் முகநூல் போல அன்றி இணையதளம் மாவட்ட சங்கத்தின் சொத்து என்றவர், மாவட்டச் செயலராக பொறுப்பேற்று ஆண்டுகள் போன பின்பும் சில கிளைகளின் பொதுக் குழுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டாமைக்கு ஆதங்கப்பட்டு, இனி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.  ஆகஸ்ட் 12 தர்ணாவிற்கு திரளாக தோழர்களை அழைத்து வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.  TM சுழல் மாற்றல் நியாயமாக விரைவில் நடத்தி முடிக்கப்படும் என உறுதி கூறினார்.
தேனீரோடு  சுவையான சுண்டல் வழங்கப்பட்டது.
மாவட்ட செயற்குழுவில் தோழர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் எட்டு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு அவை ஒருமனதாக ஏற்கப்பட்டது. (தீர்மானங்கள் தனியே)
மாவட்ட உதவிச் செயலர் தோழர் D.குழந்தைநாதன் உற்சாகமூட்டி உரையாற்றிய தலைவர்களுக்கு கலந்து கொண்ட தோழர்களுக்கு மற்றும் முற்பகல் சிற்றுண்டி வழங்கிய JAO தேர்வில் வென்ற தோழர் ஆர். ஸ்ரீநாத் மற்றும் பிற்பகல் சிற்றுண்டி வழங்கிய GM அலுவலகத் தோழர் குணசேகரனுக்கும் நன்றி கூறிய பிறகு சரியான நேரத்தில் செயற்குழு நிறைவடைந்தது, எதிர்கால இலக்குகளை நெஞ்சில் நிலைநிறுத்தி !
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

       இங்குள்ள தோழர்கள் ஒன்றாதல் கண்டே

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

     மங்காத சங்கமென்று சங்கே முழங்கு!”