.

Monday, March 28, 2016


தோழர் இஸ்லாம் உரை
( நிறைவுப் பகுதி)

பதவிஉயர்வு திட்டத்தில் உள்ள பாதகங்களை நாம் பலமுறை சுட்டிக்காட்டினோம். அதிகாரிகளுக்கு உள்ளதுபோல 2004 லிருந்து  இல்லாமல் 2008 ல் வெறும் 4 பதவிஉயர்வு பெற்றது. நாம் குறைகளை/  பாதகங்களை சுட்டி காட்டிய பொழுதெல்லாம் மிகச் சிறந்த பதவிஉயர்வு எனப் பேசி வந்த BSNLEU  தற்பொழுது புதிய பதவிஉயர்வு திட்டம் கோரிஉள்ளது.
CRS 55ii b கட்டாயப் பணிஓய்வு என்பது BSNLEU  அங்கீகாரகாலத்தில் 2006 CDA விதிகளில் திணிக்கபட்டு இன்று 55 வயது முடித்தவர்களை வீட்டுக்கு அனுப்பிடும் அதிகாரம் நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 55ii C அடிபடையில் DOT ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யமுடியாது என 2000 ஆண்டு வேலை நிறுத்த உடன்பாட்டின் மூலம் பணிபாதுகாப்பு பெற்றுள்ளோம். 2000ல் போராடாதவர்களுக்கு இந்த பாதுகாப்பு தெரியாது. நாம் உறுதியாக இருக்கிறோம்ஊழியர்களின் பணியை நிச்சயம் பாதுகாப்போம்.
பொதுத்துறை மாற்றம் என அரசு முடிவு எடுத்த பொழுது, ஊழியர்கள் நலன் காத்திட நாம் போராட்டம் செய்தோம். ஆனால் இன்று கேபினட் டவர் நிறுவனம் அமைத்திட முடிவு எடுத்த பின்னர் அரசு முடிவை மாற்றிட BSNLEU போராடவில்லை,  வேலைநிறுத்தம் ஏதும் செய்யவில்லை. மாறாக ஊழியர்களின் பணிபாதுகாப்பு, அரசுபென்ஷன் உத்திரவாதம் உண்டா? என தெளிவு படுத்திடவேண்டும் எனக் கோரி வருகிறோம் என்கிறார்கள். BBNL அமைக்கபட்ட பின்னரும் BSNLEU  ஏதும் செய்யவில்லை. ஆனால் தனது தோல்விக்குப் பொதுதுறை மாற்றத்தைக் கை காட்டுகிறது.
MTNL / BSNL இணைப்புக்குமுன் அதன் ரூ16000 கோடி கடனை அரசு ஏற்க வேண்டும். நிதி உதவி செய்யவேண்டும். மேலும் ஊழியர்கள் பிரச்சனை, பதவிஉயர்வு, ஊதியநிலை, CGA என பல பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.
8 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட / தாமதிக்கப்பட்ட கேடர் பெயர் மாற்றம்TTA க்கு JE என்ற பெயர் மாற்றத்தை  BSNLEU  ஏற்க மறுத்தது. நாம் அங்கீகாரம் பெற்றபின்  அனைத்து கேடருக்கும் இன்று தீர்வு பெறப்பட்டுள்ளது.
அனைத்து கேடருக்கும் ஆளடுப்பு விதிகளில் மாற்றம் செய்து தேர்வுகள் நடத்திடக் கோரினோம். 2013ல் தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளது.
BB  சேவையை தனியாருக்கு விட அனுமதிக்கக் கூடாது என போராடி வருகிறோம். ஊழியர்களின் திறன் உயர்த்தி BB சேவையையை மேம்படுத்திடக் கோரி வருகிறோம்.
SC/ST ஊழியர்களின் சலுகை பதவி உயர்வில் மறுக்கப்பட்டாலும், நாம் தொடர்ந்து பாராளுமன்ற நிலைக்குழுக்குப் பிரச்சனையைக் கொண்டு சென்றுள்ளோம்
மகளிருக்கு CCL மத்திய அரசுத் துறைகளில் 2008 ம்ஆண்டே அமலாகி விட்டது. ஆனால் நமது பிரிவு மகளிருக்கு 2013-ல் நாம் அங்கீகாரம் பெற்றபின்தான்  உத்திரவாக பெற முடிந்தது. பல்லாயிரம் தோழியர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர். மாற்றலில் மகளிருக்குச்  சிறப்பு சலுகை பெறப்பட்டுள்ளது.
இதர ஊழியர் பிரச்சனைகளையும் தொட்டுக்காட்டி ஊழியர் நலம் மேம்பட BSNL வளம்பெற நமது NFTE சங்கம் முதன்மைச் சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கென நீங்கள் ஒன்றுபட்டு கடுமையாக உழைக்க வேண்டும் என மீண்டும் நமது கடமையை நினைவூட்டி உரையை நிறைவு செய்தார். தோழர் இஸ்லாம் அவர்களின் தமிழ் மாநில சுற்றுபயணம்  உணர்வூட்டுவதாக நமக்கு உற்சாகம் ஊட்டுவதாக மிக சிறப்பாக அமைந்திருந்தது.


அஞ்சலி

                     நமது மாநில சங்க அலுவலகக் காப்பாளராக பணிபுரிந்த தோழர் N. கார்த்தி நேற்று (27.3.2016) அகால மரணமடைந்தார். அவரது மறைவிற்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

இன்று 28.3.2016 காலை தோழரது இறுதி அஞ்சலி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் AITUC  மாநில செயலர் தோழர் T.M.மூர்த்தி, AITUC மாநிலப்பொருளர் தோழர் ராதாகிருஷ்ணன், கட்டிட தொழிலாளர்கள் சங்க மாநில செயலர் தோழர் ரவி, நமது சங்கத்தின் சார்பில் மாநில செயலர் தோழர் பட்டாபி, மூத்தத்தோழர் ஆர்.கே, தோழர் சேது, மாநில உதவிசெயலர்கள் தோழர் சென்னக்கேசவன், தோழர் முரளி, காரைக்குடி மாவட்ட செயலர் தோழர் மாரி, காரைக்குடி தோழர் முருகன், ராஜபாளையம் தோழர் ஜெயப்பிரகாஷ், காரைக்குடி தோழர் தமிழ்மாறன், கடலூர் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், திண்டிவனம் ஜெயச்சந்திரன் மற்றும் தேவகோட்டை ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டு மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தினர்.


Saturday, March 26, 2016

தமிழக சுற்றுப்பயணத்தில் NFTE அனைத்திந்தியத் தலைவர்,
தேசியக் குழு ஊழியர் தரப்புத் தலைவர்,
பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்ட செயல் வீரர்
தோழர். இஸ்லாம் அஹமது அவர்கள் ஆற்றிய உரை  
(பகுதி 1)
 
[“பிரச்சனை புரியாதவர், தீர்வு செய்ய தெரியாதவர், பிரச்சனை குறித்த அறிவு இல்லை,, கமிட்டியில் … … பேசாமல் அமைதியாக இருந்தார் எனப் பலவாறாக தோழர். இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்  BSNLEU பொதுச்செயலர். அவரது பேச்சைப் பார்க்கும் போது ஒரு படத்தில் எதிர்கட்சி பற்றி வடிவேலு கூறுவதைக் கேட்டு கூட்டத்தில் இருப்பவர், இவர் கூறுவதை எல்லாம் பார்த்தால் இவர் தான் செமித்தியா எங்கேயோ வாங்கிகிட்டு வந்த மாதிரியே தெரியுதே என சொல்வது போலவே இருக்கிறதுஎன்ன செய்ய நாட்டியம் ஆடத் தெரியவில்லை எனக் கூறமுடியுமா? எனவே முந்திக் கொண்டு மேடை கோணல் எனப் பிதற்றித் திரிகிறார்,,, இந்தப் பின்னணியில் நமது தலைவர் இஸ்லாம் அவர்களின் உரை ]
“”நாம் நமது வளமான எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். நமது நிறுவனம் வளமாக இருப்பதற்கும், நிதி ஆதாரம் மேம்பாடு அடைவதற்கும், தொடர்ந்து போராடுவோம். பணி பாதுகாப்பு ,அரசு பென்சன், நிதி ஆதாரமேம்பாடு ஆகியற்றுடன் நமது எதிர்காலம் இணைக்கப்பட்டுள்ளது.
என்னை பற்றிய விமர்சனங்களை நமது தோழர்கள் ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்கள்.  உண்மைதான், நான் உருவத்தில் குள்ளம், நான் மிக சிறியவன், பெரிய ஆகிரிதியான தோற்றம் உடையவன் இல்லை, மிகப் பெரிய அறிவு இல்லை, அராஜகம், தலைக்கனம், எல்லாம் அறிந்த மேதாவித்தனம் என்னிடம்  இல்லை. யாரும் முழுமையானவர்கள் இல்லை. அனைவரிடமிருந்தும் கற்று வருபவனாகத்தான் நான் இருந்து வருகிறேன்..
அறிவில் சிறந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர், போராட்ட குணம் மிக்கவர்கள் என அழைத்துக்கொண்டு சரணாகதி ஆனவர்கள் கண்ட ஊதிய் உடன்பாடு ஊழியருக்கு எத்தனை துயரத்தைக் கொடுத்துள்ளது என்பதை அறிவீர்கள். 78.2% கிராக்கிப்படி இணைப்பு, 5 வருட ஊதிய மாற்றம்,, 30% ஊதிய நிர்ணயம் என அதிகமாக பேசிவிட்டு சரணாகதி ஆனதைப் பார்த்தோம். 2002-- ல் தோழர் குப்தா அனைவரையும் ஒன்றிணைத்து, சிறந்த ஊதிய ஒப்பந்தம் கண்டார். ஊழியருக்கு பாதகம் ஏதுமில்லை. ஆனால் மிகுந்த அறிவு மிக்கவர்கள் தனியே தனனந்தனியேஎன வீரம் பேசிச் சென்று நிர்வாகம் கூறியதை ஏற்று மூன்றரை வருடத்திற்கு பின்னர், கையெழுத்திட்டனர். நிர்வாகம் கொடுத்த அதே ஒப்பந்தந்தை 14 மாதம் ஏதும் செய்ய முடியாது அமைதியாக இருந்து விட்டு கையெழுத்திட்டனர்.
நாம் குப்தா வழி நின்று அனவரையும் ஒன்றுபடுத்தி 2017 ல் புதிய ஊதிய ஒப்பந்தம் காண்போம். இதுதான் DOT  கால ஊழியருக்கு கடைசி ஊதிய மாற்றம் ஆகும்.
நமது நிறுவனத்தை லாபகரமாக ஆக்குவோம் எனத் தேர்தல் ஊறுதிமொழி கொடுத்தோம். இன்று ரூ10000 கோடி நட்டத்தில் இருந்த நிறுவனத்தை ரூபாய் 762 கோடி OPERATIVE  லாபத்தில் வந்துள்ளது. மூன்று ஆண்டுகளில் நாம் முன்னேறியுள்ளோம்.. வருமான வரி இலாக்கா தர வேண்டிய ரூ10000 கோடி நிதி வரவுள்ளது. அதிகமாக வரி பிடிக்கப்பட்டதைச்  சுட்டிக் காட்டி மீண்டும் தரக் கோரியது நாம். அந்த தொகை வந்தால் லாபமீட்டும் நிறுவனமாக மாறும்.
எனவே நாம் நமது 2017 ஊதிய மாற்றத்தை கண்டிப்பாக, சிறப்பாக, அனைவரும் பலன் பெறும் வகையில் அனைவரையும் உடன் அழைத்துகொண்டு பெறுவோம்.
அறிவில் சிறந்த மேதாவிகள் கண்ட  ஊதிய உடன்பாடு, போனஸ் பார்முலா, CDA 2006 விதிகள், பதவி ஊயர்வு அனைத்தும் ஊழியருக்கு பாதகமானதாகவே மாறியுள்ளது.
18 ஆண்டுஉயர்வுத்தொகை உள்ள span ஐ சுருக்கி,  ஊதிய நிலை குறைத்து 15 ஆக மாற்றி அனைத்து  குருப் டி ஊழியர்களையும்,, TM,  Sr.TOA  உட்பட பல கேடர்கள் ஊதியத் தேக்கத்தால் பாதிக்கப் பட்டுள்னர்.. சுமார் 30000 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நிர்வாகம், நீங்களே கையெழுத்திட்ட ஊதிய மற்றத்தை, அரசின் ஒப்புதல் பெற்றதை மாற்ற முடியாது எனக் கூறி வருகிறது.. அதிகாரிகள் 21 இன்கிரிமெண்ட் பெற ஒப்பந்தம் கண்டனர். அறிவில் சிறந்த மேதாவிகள் 18 ஆண்டுஉயர்வுத்தொகை ஊதிய நிலையாய் இருந்ததைக் குறைத்து 15 ஆக மாற்றிய பாதகத்தை ஊழியர்கள் மீது சுமத்தியுள்ளனர். விளைவு ஊதியத் தேக்கநிலை,  பாதக பதவி உயர்வு தேக்கநிலையை  கூடுதலாக்கியுள்ளது.. பதவி உயர்வில் சென்றாலும் தேக்கநிலை காரணமாக பலன் பெறமுடியவில்லை.
2007ல் வந்தவர்கள் நிலை இதை விட மோசம் எனக் கூறுமளவிற்கு வரலாறு காணாத ஊதிய பிடித்தம் செயய ஒப்பந்தம் கண்டனர்.  2013-- க்கு பின் நமது தொடர் முயற்சியால் ஊதிய ஒப்பந்தம்  சரி செய்யப் பட்டுள்ளது.இந்த அறிவிறல் சிறந்தவர்கள் 5 இன்கிரிமெண்ட், 30% நிர்ணயம் என வானம் அளவுக்கு பேசிவிட்டு ஊதிய ஒப்பந்தத்தில் கோட்டை விட்ட பின்னர் அமைதியாக  இருந்தனர், நாம் ஒரு இன்கிரிமெண்ட் பெற்று அவர்கள் நட்டத்தை ஈடு செய்துள்ளோம். மற்றகேடருக்கும் ஏற்க வைத்துள்ளோம்.
78.2% உத்திரவு வந்த பின்னரும் தெரிந்தே 68,8% உடன்பாடு கண்டனர், அதி மேதாவிகள். அதனை நியாயபடுத்தவும் செய்தனர். 2013 நாம் அங்கீகாரம் பெற்ற பின்னர் அனைவரையும் ஒன்று படுத்திப்பெற்றுள்ளோம். 78 மாத ஊதிய நிலுவை லட்சம் ரூபாய்க்கு மேல் மறுக்கப்பட்டுள்ளது,. 2013 க்கு முன் தனி அமைப்பு வைத்து பல கோரிக்கைகளுக்குப் போராட அறிவிப்பு தந்தாலும் தீர்வு ஏதும் இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.
உற்பத்தித்திறன் போனஸ் ஒப்பந்தத்தை நிர்வாகம் காட்டிய லாபத்துடன் போனஸ் என்ற வலையில் சிக்கி BSNLEU  ஒப்பந்தம் கண்டதால்  போனஸ் இழந்தோம்.
4 ஆண்டுகளாக போனஸ் இல்லை. அறிவில் சிறந்தவர்கள் போனஸ் ஒரு உரிமை மறுப்பு/பறிப்பு ஆக பார்க்க மறுத்து  தனது தவறை மறைக்க போனஸ் எதற்கு ?  வாங்கும்  ஊதியமே அதிகம் என வக்ரம் பேசி வந்தனர், ஊதிய ஒப்பந்தத்தில் (PPPPperformance Measured System )Perp என்ற PMS  அளவீடு  அடிப்படை என ஒப்பந்தம் கண்டனர்.  2013 க்குபின் நாம் அங்கீகாரம் பெற்றபின் கமிட்டி அமைக்கப்பட்டு PMS  அளவீடு  என்பது மாற்றப்பட்டது. போனஸ் இழப்புக்குக் காரணமான PMS  அளவீட்டின்படி அமைந்த BSNLEU ஒப்பந்தத்தை-- PMS  அளவீடு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டதல்ல எனவே அதுபற்றி எதுவும் விவாதிக்கத் தேவையில்லை என ஏதும் பேசாத இஸ்லாம்”” மாற்றி காட்டியுள்ளார். மூன்று அடிப்படையில் மட்டுமே போனஸ் என்பதை மாற்றி fair என்பதும் அளவீடாக இருக்கவேண்டும் என்பதை ஏற்கச் செய்துள்ளோம். எந்த நிலையிலும் குறைந்த பட்ச போனஸ் என்பது கட்டாயம் இருக்க வேண்டும் என ஏற்கச் செய்துள்ளோம். அட்ஹாக் போனஸ் என்பதைப் பெற CMD  யிடம் வலியுறுத்jjத உள்ளோம். ஆனால் மார்ச் 10 லிருந்து போனஸ் கமிட்டி கூட்டம் கூட்ட தேதி தராமல் , போனஸ் பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் BSNLEU பொது செயலர் செயல் பட்டு வருகிறார்.. , போனஸ் உரிமை என நம்து சங்கம் கருதுகிறது.  BSNLEU சங்கத்தால் நாம்  இழந்த போனஸ் உரிமையை மீட்டு எடுப்பதில் நமது சங்கம்  முனைப்புடன் உள்ளோம்.
(தொடரும்)