.

Thursday, December 1, 2016

அஞ்சலி
          
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், விடுதலை போராட்ட தியாகியுமான தோழர் R. நல்லக்கண்ணு அவர்களின் துணைவியார் திருமதி ரஞ்சிதம் ( வயது 82 )அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தோழியர் ரஞ்சிதம் ஆசிரியர் பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள மணல்விளை ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
நல்லகண்ணுவின் பொதுவாழ்க்கை வெற்றிகரமாக அமையவும், மக்களின் நன்மதிப்பைப் பெறவும் இவரது ஆதரவும், ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது.
கணவரின் பொதுவாழ்க்கையையும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிறப்பாக பராமரித்து வந்த தோழியர் ரஞ்சிதம், கல்விப் பணியில் தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி வந்தார்'.

தோழியர்ரஞ்சிதம் உடலுக்கு நாளை (டிச.2) மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்தில் இறுதிச் சடங்குகள் காரியங்கள் நடைபெறும். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்  கொள்கின்றோம்.
             தோழமையுடன்
  NFTE- மாவட்ட சங்கம்,கடலூர்.
TMTCLU- மாவட்ட சங்கம்,கடலூர்.

No comments:

Post a Comment