.

Wednesday, February 24, 2016

செயலகக்கூட்டம்-23-02-2016
மாவட்டத்தலைவர் தோழர் R.செல்வம் தலைமையில் கடலூரில் நடைபெற்றது. மாவட்ட உதவிச்செயலர் தோழர் P.சென்னகேசவன், மாநிலப் பொருளர் தோழர் K.அசோகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நமது மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்களின் அறிவுறுத்தலின்படி பண்ருட்டிக் கிளை அமைப்பு பிரச்சனை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் நமது ஊழியர் சரிபார்ப்பு தேர்தலை எதிர்கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
வேலூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கான ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையினை கிளைச்செயலர்கள் மாவட்ட செயலரிடம் வழங்கினர்.
மாநில துணைத்தலைவர் தோழர். லோகநாதன், மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கூட்டத்தில் மூத்த தோழர் தமிழ்மணி கலந்துகொண்டு சிறப்பித்தார். மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.


  

No comments:

Post a Comment