.

Monday, December 14, 2015

சென்னை BSNL தோழர்களுக்கு வாழ்த்துக்கள்!

சென்னை BSNL ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தோழர் R.ரவி JAO அவர்கள் தலைமையில் ரூபாய் அறுபத்தையாயிரம் மதிப்புள்ள நிவாரண பொருள்களுடன் (10 பொருள்கள் அடங்கிய பை) தோழர் R.ரவி JAO அவர்களின் துணைவியார் திருமதி.சித்ரா ரவி, அவர்களின் உறவினர் சாந்திவிட்டல், பனிமலர்(From U.S) மற்றும் தோழர்கள் பாலா அவரின் நண்பர்கள். பல்லாவரம் சம்பத், மகேஷ், மணி, கணேஷ், சிட்லபாக்கம்- ரவி, சரவணன்-குரோம்பேட்டை, ஆகியோருடன் சிதம்பரம் பகுதியை தேர்வு செய்து நிவாரணம் வழங்க வந்தனர். அந்த தோழர்களை சிதம்பரம் பகுதி தோழர்கள் V.கிருஷ்ணமூர்த்தி-கிளைசெயலர், K.நாவு -கிளைத்தலைவர், D.ரவிச்சந்திரன் மாவட்டஉதவிசெயலர், K.கிருஷ்ணகுமார். மாவட்டஉதவிசெயலர் ஆகியோர் இவர்களை  வரவேற்று தேவையான ஏற்பாடுகளை உடனிருந்து செய்துகொடுத்தனர். சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் K.பாலகிருஷ்ணன் அவர்களின்  ஆலோசனைபடி பிச்சாவரம் ஊராட்சியில் உள்ள காடுவெட்டி என்ற கிராமத்தில் வழங்க ஏற்பாடு செய்தார். நாமே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருள்களை வழங்கினோம். அப்பகுதி வாழ் மக்கள் நமக்கு சிறந்த உபசரிப்பும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். இதனால் சுமார் 90 பேர் பயன் பெற்றனர்.
கடலூர் NFTE மாவட்ட சங்கம் சார்பாக சென்னை தோழர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.










No comments:

Post a Comment