.

Monday, December 14, 2015

கடலூர் மாவட்டசெயலகக்கூட்டம்
12-12-2015 மாலை 4.00 மணியளவில் மாவட்டத்தலைவர் தோழர்       R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட சங்க நிர்வாகிகள் உட்பட அனைத்து தோழர்களும் திரளாக கலந்துகொண்டது மகிழ்ச்சியளித்தது.


கூட்டத்தில்,
மாவட்ட சங்க அறைகூவலுக்கு இணங்க தோழர்களிடம் பெறப்பட்ட வெள்ள நிவாரணப் பணம் ரூ.10000 மாவட்டச்சங்கத்திடம் வழங்கப்பட்டது.
மாநில மாநாட்டு நன்கொடை ரசீது புத்தகங்கள் குறைவாக இருந்த காரணத்தினால் கடலூர்,நெல்லிகுப்பம்,விழுப்புரம் கிளைகளைத்தவிர மற்ற கிளைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இக்கிளைகளுக்கு ரசீது புத்தகங்கள் வந்த பிறகு அளிக்கப்படும். ரசீதுபுத்தகம் பெற்ற கிளைகள் விரைவாக தங்களது முழுநேரப் பணியாக இதனை முடித்து வருகின்ற ஜனவரி 10 தேதிக்குள் நன்கொடையை அளித்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறது.
EOI
டென்டர் பிரச்சனையில் துணைப்பொது மேலாளர் (நிர்வாகம்) அவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒரு வாரத்தில் EOI டென்டர் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளார். ஒரு வாரத்தில் இப்பிரச்சனையில் தீர்வு எட்டப்படவில்லையெனில் தீவிர போராட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இறுதியாக மாவட்ட உதவிச்செயலர் தோழர்.D.குழந்தைநாதன் துணைப்பொது மேலாளருடன் நடைபெற்ற EOI பேச்சு வார்த்தையை விளக்கிக்கூறி நன்றி கூறினார்.










No comments:

Post a Comment