.

Monday, June 1, 2015


கடலூர் OFC பராமரிப்பு டீம் இன்று (01-06-2016) பழுது சரிபார்ப்பு பணிக்காக கள்ளக்குறிச்சி அருகே இலாக்கா TEMPO TRAVELLER-ல் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி அதில் சென்ற எட்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்தில் திரு.K.பன்னீர்செல்வம்-SDE, தோழர்கள் A.R.கலியமூர்த்தி-MotorDriver,  V.ராஜு-TTA, P.முருகவேல்-TTA, N.ஜெயராமன்-TM, M.சக்திவேல்-TM, D.கிருஷ்ணமூர்த்தி-CL, D.சத்தியமூர்த்தி-CL. அதில் SDE அவர்கள் பலத்த காயமடைந்து புதுவை மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை மியாட் மருத்துவமனையிலும், மற்ற ஆறு பேர் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிவர மாவட்ட சங்கம் விழைகிறது.
விபத்து ஏற்பட்டவுடன் கள்ளக்குறிச்சி பகுதி தோழர்கள் அவர்களுக்கு வேண்டிய முதலுதவி செய்து  உடனடியாக மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கடலூரிலும் நமது தோழர்கள் உட்பட ஓய்வுபெற்ற தோழர்கள், மற்றும் தோழமை சங்கத் தோழர்களும், அதிகாரிகளும் உடனிருந்து அவர்களுக்கு வேண்டிய உதவி செய்தது பாராட்டுக்குரியது. 



1 comment:

  1. அனைவரும் குணமடைந்து நலமாகட்டும் மநில சங்க ஆறுதல்கள்

    ReplyDelete