.

Friday, June 19, 2015

செயலகக் கூட்ட முடிவுகள்
18-06-2015
செயலகக் கூட்டம் 18-06-2015 மாலை கடலூர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர்.R.செல்வம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த தோழர் S.தமிழ்மணி, மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் மற்றும் மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத் தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் முடிவுகள்
  • ஜூலை முதல் வாரத்திற்குள் சிரில் அறக்கட்டளை தமிழுக்கு ஊக்கம் பரிசளிப்பு விழாவை நடத்துவது எனவும்  அதற்கான முழு பொறுப்பை அறக்கட்டளை செயலர் தோழர்.V.லோகநாதன் அறக்கட்டளை உறுப்பினர் தோழர். G..ஜெயச்சந்திரன் ஆகியோர் மேற்கொள்வர்.
  • EOI டெண்டர் பகுதியில் பணிபுரியும் தொலைபேசி நிலைய செக்யூரிட்டி ஆட்குறைப்பு பிரச்சனை
  • சிதம்பரத்தில் நடைபெற்ற அதிகாரிகள்-ஊழியர்கள் கலந்தாய்வு கூட்ட முடிவுகள் மற்றும் மற்ற கோட்டப்பொறியாளர் பகுதிகளில் நடைபெறவிருக்கின்ற கலந்தாய்வு கூட்டத்தில் நமது பங்கை எப்படி செய்வது எனவும் நமது நிறுவனத்தை முன்னெடுத்து செல்வதற்கு நமது பங்களிப்பை முழுமையாக அளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
  • கூட்டத்தில் விருத்தாசலம் புதிய கிளைச்செயலர் தோழர்.V.இளங்கோவன் தோழர்.S.தமிழ்மணி அவர்களால் கௌரவிக்கப்பட்டார்.





No comments:

Post a Comment