.

Monday, April 27, 2015

பொய்புகாரை முறியடிப்போம்

BSNL காக்கும் அகில இந்திய அளவில் ஏப்ரல் 21,22 ஆகிய இரண்டு நாள் நடைபெற்ற வேலைநிறுத்தம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஆனால் சென்னையில் இந்த வேலைநிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் அமுதவாணன் என்ற நபர் சிலருடன் சேர்ந்து முயற்சி செய்தனர். இதனை முறியடித்து சென்னையில் நமது தோழர்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கியுள்ளனர்.
இதனை பொறுக்காத அமுதவாணன் காவல் துறையில் கூட்டமைப்பு தலைவர்கள் கன்வீனர் S.செல்லப்பா, தலைவர் தோழர்.R.பட்டாபி உள்ளிட்ட ஐந்து பேர் மீது பொய் புகார் கொடுத்து, அதன் மீது நமது தலைவர்களை காவல் துறை இன்று (27-04-2015) விசாரணை செய்துள்ளது . நமது தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள  பொய் புகாரை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிப்போம்.

இச் செயலை கண்டித்து

தமிழ்நாடு முதன்மைப் பொது மேலாளர் அலுவலக வாயிலில்
சென்னை கிரீம்ஸ் ரோடு
29-04-2015 புதன்கிழமை காலை 9-00 மணியளவில்
உண்ணாவிரதம்
நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு வெற்றிகரமாக்குவோம்.


NFTE கடலூர் மாவட்ட சங்கம்




No comments:

Post a Comment