.

Saturday, March 21, 2015

விருத்தாச்சலம் கிளை மாநாடு
19-03-2015
கிளைத்தலைவர் தோழர்.V.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கிளைச்செயலர் தோழர்.R.ராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்த
 மூத்தத்தோழர். D.மோகன்ராஜ் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.
மாநில துணைத்தலைவர் தோழர்.V.லோகநாதன் துவக்கவுரையாற்றினார். தனது துவக்கவுரையில் “ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க நாம் முழுமையாக கலந்துகொண்டு வெற்றிகரமாக்கவேண்டும்“ என வலியுறுத்தினார்.
கிளை ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டு முழுமனதுடன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கிளை நிர்வாகிகள் தேர்வில்  ஒன்றுபட்ட பட்டியலுக்கு மாவட்டசங்கம் முயற்சிசெய்தும் பலனில்லாமல் தலைவர், கிளைசெயலர் பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டது. மொத்தமுள்ள 25 கிளை உறுப்பினர்கள் முழுமையாக கலந்துகொண்டது சிறப்பம்சமாகும்.
 கிளைத்தலைவராக தோழர்.லாரன்ஸ்,STS
கிளைசெயலராக தோழர்.V.இளங்கோவன்,Motor Driver
கிளைப்பொருளராக தோழர்.கமலக்கண்ணன், TTA
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திட்டக்குடி,பெண்ணாடம்,உளுந்தூர்பேட்டை,விழுப்புரம்,சிதம்பரம்,கடலூர் பகுதி தோழர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சம்மேளனச்செயலர் தோழர்.G.ஜெயராமன்
 மாநில அமைப்புசெயலர் தோழர்.N.அன்பழகன்
 ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி முன்னாள் மாவட்டசெயலர் தோழர்.P.சுந்தரமூர்த்தி, 
மாவட்ட அமைப்புசெயலர் தோழர்.K.அம்பாயிரம்,
மாவட்ட உதவித்தலைவர்கள்  
தோழர்.S.அன்பழகன்,தோழர் P.அழகிரி, 
மாவட்ட உதவிச்செயலர் தோழர்.D.ரவிச்சந்திரன்,  
மாவட்டத்தலைவர் தோழர்.R.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.

கிளைசெயலர் தோழர்.V.இளங்கோவன் நன்றியினை கூற மாநாடு நிறைவுற்றது.











No comments:

Post a Comment