.

Wednesday, January 14, 2015

பாராட்டுக்கூட்டம்
டெலிகாம் மெக்கானிக் தேர்வுக்காக  வகுப்பு எடுத்த தோழர்களுக்கு
 பாராட்டு கூட்டம் கடலூர் மாவட்டசங்க அலுவலகத்தில்
இன்று ( 14-1-2015) மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் தோழர். செல்வம் தலைமைதாங்கினார்.
 பயிற்சி வகுப்பு எடுத்து தேர்வு எழுதிய தோழர்கள்,தோழியர்களை வெற்றிபெறச்செய்த
தோழர்கள் D.அன்புதேவன்-TTA , S.குருபிரசாத்-TM, M.S.குமார்-CL ஆகியதோழர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் தேர்வில் வெற்றிபெற்று வருகின்ற 19-1-2015 பயிற்சி வகுப்புக்கு சென்னை செல்லவிருக்கின்ற
தோழர்கள் A.சகாயசெல்வம், R.விஸ்வநாதன், தோழியர்கள் V.மகாலட்சுமி, S.அம்பிகா-புதுவை

ஆகியோர்களுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. தோழர்களை வாழ்த்தி மாவட்டசெயலர் இரா.ஸ்ரீதர், ஓய்வு பெற்ற தோழர்.V.நீலகண்டன், V.பாலச்சந்திரன்-TTA V.முத்துவேல்-TM, ஆகியோர் பேசினர்.











No comments:

Post a Comment