.

Monday, May 12, 2014

TMTCLU உளுந்தூர்பேட்டை கிளை மாநாடு



௦9-௦5-2௦14 அன்று உளுந்தூர்பேட்டையில் தோழர் M.நஷீர் பாஷா  அவர்களின் தலைமையில்,  TMTCLU துணை பொது செயலர் A.சுப்பிரமணியன் அவர்கள் சங்க கொடியினை ஏற்றிவைத்து  சிறப்பான கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டில்   NFTE யின் கிளை செயலர் தோழர் நாராயணன் , சேகர், T.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் தோழர்கள் பங்கேற்றனர். பழமலை என்கின்ற விருதாசலத்திலிருந்து தோழர் S.அன்பழகன் அவர்களின் தலைமையில் தோழர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும், பண்ருட்டியிலிருந்து தோழர் ராஜா பங்கேற்றதும், சிறிய கிளையாக இருந்தாலும் 3௦ மேற்பட்ட தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது   சிறப்பானதாக இருந்தது . வரவேற்புரையாக தோழர் D.K என்கின்ற D.குழந்தைநாதன் அவர்கள் உரையாற்றினார் அடுத்தபடியாக வாழ்த்துரையாக தோழர் M.அம்பாயிரம் மாவட்ட உதவி தலைவர் NFTE அவர்களும், தோழர் G.கணேசமூர்த்தி அவர்களும், S.அன்பழகன் மாவட்ட உதவி தலைவர் NFTE அவர்களும், A. சுப்பிரமணியன் மாநில துணை பொது செயலர்  TMTCLU அவர்களும்,மற்றும் TMTCLU மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் G.ரங்கராஜு  நீண்ட நெடிய உரையாற்றினர் ஒப்பந்த   தொழிலாளர்கள்  நாம் ஒற்றுமையுடன் அதிக செயல்பாட்டுடனும் செயல்பட வேண்டும் என தனது கருத்துகளை பதிவு செய்தார். மற்றும் M.S. குமார் மாவட்ட தலைவர் TMTCLU அவர்களும் வாழ்த்துரை வழங்கி தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
      சிறப்புரையாக நமது பொது செயலர் தோழர் R.செல்வம் அவர்கள் நீண்ட நேரம் மாநில சங்க செயல்பாடு பற்றியும், மாநில சங்கம் என்ன என்ன கோரிக்கைகளை வைத்து தொழிலாளர்களுக்காக பயன் தரும் வகையில் செயல்படுகிறது என்பதை பற்றியும், ஒப்பந்த தொழிலாளர்கள் எவ்வாறு ஒற்றுமையுடனும் செயல்படுவது,  வரும் மே மாதம் 17-ம் தேதி கடலூர் மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் (G.M OFFICE-CUDDALORE) முன்பாக நடைபெறுகின்ற ஆர்பாட்டத்தில் நமது கோரிக்கைகளை வென்று எடுக்க திரளான தோழர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனவும் நமது மாநில செயலர்  சுட்டிகாட்டி தனது சிறப்புரையினை முடித்தார்.
      இறுதியாக தோழர் P.அழகப்பன் நன்றி கூற மாநாடு இனிதே முடிவுற்றது.








No comments:

Post a Comment