.

Sunday, February 27, 2011

CBI books DGM BSNL for purchase fraud - PRESS TRUST OF INDIA

Jammu, Feb 26:  The CBI has booked two top officials of BSNL and a private company for alleged irregularities in purchase of portable linemen testers, official sources said here today.

Friday, February 25, 2011

Thursday, February 24, 2011

Number Portablity


NEW DELHI, INDIA: The mobile number portability seems to have hit hard the state owned telecom players. While Bharat Sanchar Nigam Ltd (BSNL) lost 131,581 customers Mahanagar Telephone Nigam Ltd's (MTNL) subscriber base declined by 5,869 customers after number portability (MNP) service was introduced.

News from Business Standard...


DoT revives BSNL, MTNL merger plans
Mansi Taneja & Surajeet Das Gupta / New Delhi February 23, 2011, 0:17 IST

The Department of Telecommunications (DoT) has revived a proposal for the merger of state-run telecom firms Bharat Sanchar Nigam Ltd (BSNL) and Mahanagar Telephone Nigam Ltd (MTNL) to synergise their business operations across the country. The proposal floated by DoT under Communications Minister Kapil Sibal gains significance because the merger plan was given a quiet burial under former telecom minister A Raja

Monday, February 21, 2011

Time is fast running out .......

Time is fast running out - lose no time to crucify non performing independent business heads of BSNL - emulate Azim Premji’s swift action of axing non performing top management of wipro. 

Sunday, February 20, 2011

நமது நிறுவனம் மிக மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில் நமது  மார்கெட் பங்கு நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.  (பார்க்க அட்டவணை) . 

Thursday, February 17, 2011

BSNL RUNNING OUT OF CASH - THE FINANCIAL EXPRESS

State-owned BSNL, which once aspired to become a Navratna company, today has money just enough to survive for another year.

Thursday, February 10, 2011

MRS - "MISSION IMPOSSIBLE?"


MRS திட்டத்தின் கீழ் "மாநில அலுவலகத்திற்கு '  CLAIM BILL ' அனுப்பபபடும் போது அனுசரிக்க வேண்டிய முறைகள் பற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு - மாநில 
அலுவலத்தின் "அறிவுறுத்தல்" கள் கீழே தொகுக்கப் பட்டுள்ளன:


(அ) அனுமதிக்கப்பட்ட மருத்துவமணைகளில்,உள் நோயாளிகளாக 
        சிகிச்சை பெற்ற , செலவு (PAY+DA) வைப்போல இரு மடங்கு 
       ஆகியிருந்து, அத்தகைய 'CLAIM" மாநில அலுவலகத்திற்கு 
       அனுப்பப்படும் போது,  கீழ்க்கண்டவை உறுதி செய்யப்பட வேண்டும்.


1. மாவட்ட நிர்வாகம்-நோயாளி எவ்வளவு நாள் மருத்துவ மணையில்  
    தங்கியிருந்தார்    என தெளிவாக தெரிவிக்க வேண்டும்.


2. இவருக்குத்தான் சிகிச்சையளிக்கப்பட்டது என மருத்துவர் சான்றுரைத்த  
    MRS   கார்டின் காப்பி இணைக்கப்பட வேண்டும்.


3. உள் நோயாளியாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள்  சிகிச்சை    
    பெற்றிருந்தால்,    உரிய அதிகாரி, சிகிச்சை அளிக்கப்பட்டுக்  கொண்டிருக்கப்படும்   
    நாட்களில், மருத்துவ மணைக்குச் சென்று,    MRS  கார்டினை சரிபார்த்து,     
    குறிப்பிட்ட படிவத்தில், ரிப்போர்ட் செய்திருக்க வேண்டும்.


4. சிகிச்சை 10 நாட்களுக்கு மேற்பட்டால் - மருத்துவரின் சான்றும், மாவட்ட 
    நிர்வாகத்தின் அனுமதியும் தேவை.


5. இம்மாதிரியான "CLAIM"  கணக்கதிகாரியினால் முழுமையாக "செக்      
    செய்யப்பட்டு", 'அட்டெஸ்ட்" செய்யப்பட வேண்டும்.


6. பொது மேலாளர் மற்றும் IFA -"ரெகமண்ட்"  செய்திருக்க வேண்டும்.


7.  'CLAIM'  ஆறு மாத்திற்குள்ளாக செய்யப்பட வேண்டும்.  கால தாமதமான 
     அனைத்து   ' CLAIM' களும் நிராகரிக்கப்படும்.


(ஆ)  அங்கீகரிக்கப் படாத மருத்துவ மணைகளில் - அவசர நிலை கருதி -   
         சிகிச்சை  பெற்றிருந்தால்:


1. சிகிச்சையளித்த மருத்துவரிடமிருந்து, நோயின் தன்மை மற்றும் 'அவசர 
    நிலை'    குறித்த சான்றுரை.


2. அங்கீகரிக்கப் படாத மருத்துவ மணைகளில் - அவசர நிலை கருதி -
    அட்மிட்   செய்தது குறித்து   நிர்வாகத்திற்கு சம்பத்தப்பட்ட ஊழியர் 
    அளித்த   'INTIMATION 'கடிதம்.


3. உரிய அதிகாரி 'மருத்துவ மணைக்குச் சென்று பார்த்த 'ரிப்போர்ட்'.


4. நோயாளியின் இல்லத்திலிருந்து - அங்கிகரிக்கப்பட்ட மருத்துவ மணை
     எவ்வளவு தூரத்தில் உள்ளது. 


    நோயாளியின் இல்லத்திலிருந்து - அட்மிட் ஆன மருத்துவ மணை
     எவ்வளவு தூரத்தில் உள்ளது. 


    நோயாளியின் இல்லத்திலிருந்து - வேறு ஏதாவது மருத்துவ மணை 
    இருப்பின்  அந்த மருத்துவ மணையின் தொலைவு.


5.  மாவட்ட நிர்வாகம், "CLAIM" அனுமதித்து மாநில அலுவலகத்திற்கு -
   "ரெகமண்ட்"  செய்திருக்க வேண்டும்.


6. இதுவரை மொத்தமாக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட / 
    அனுமதிக்கப்படாத மருத்துவ மணைகளில்     CLAIM செய்யப்பட்ட 
    தொகை யினையும்   குறிப்பிடப்பட வேண்டும்.


7. இவருக்குத்தான் சிகிச்சையளிக்கப்பட்டது என் மருத்துவர் சான்றுரைத்த 
    MRS   கார்டின் காப்பி இணைக்கப்பட வேண்டும்.


(இ)  வேறு மா நிலங்களில் சிகிச்சை பெற்றிருந்தால்:


      மேற்கண்ட (7) அம்சங்கள் தவிர,  அந்த மாநிலத்தின் 'CGM'
      அவர்களிடமிருந்து  பெறப்பட்ட 'அனுமதிக் கடிதம்'


(ஈ) 'அப்போலோ - கிரீம்ஸ் ரோடு சென்னை', 'வேலூர் CMC', கேன்ஸர்    
        இன்ஸ்ட்டிடியூட்-அடையார்', 'MMM-சென்னை', 'சங்கர நேத்ராலயா 
       சென்னை'  போன்ற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ  மணைகளில்  சிகிச்சை  
       பெற்றிருந்தால்:


      மேற்கண்ட (7) அம்சங்கள் தவிர,  மாவட்ட நிர்வாகத்திற்கு ஊழியரின் 
       மருத்துவ    மணையில் சேர்ந்தது பற்றிய தகவல் கடிதம்.


(உ)  புற நோயாளியாக சிகிச்சை பெற்றிருந்து - அனுமதிக்கப்பட்ட 
        தொகையினுக்கு    மேல் 'CLAIM'  செய்யப் பட்டால்:


        'CLAIM'  மாவட்ட நிர்வாகத்தால் முழுமையாக பரிசீலக்கப்பட்டு- 
          அனுமதிக்கப்பட்டு - 'ரெகமண்ட்'  செய்யப்பட்டிருக்க வேண்டும்.
         Priscription and Bills in original  வேண்டும். மற்றும் சிகிச்சியளித்த  மருத்துவரின்  
         சான்றுரை.


(ஊ)  இது தவிர பொதுவான அறிவுறுத்தல்களில் முக்கியமானவை:
          'ஸ்டண்ட்' வைக்கப்பட்டிருந்தால் அந்த 'ஸ்டண்ட்' பேட்ச் நெம்பர்,   
          'ஸ்டண்ட்'    வெளி உறை, அதன் ஸ்டிக்கர்  உட்பட அனைத்து 
           விவரங்களும்   
          நமது விளக்கம் (ஸ்டண்ட்' என்பது இருதய இரத்த குழாய் 
         அடைப்பு  டைப்புகளை நீக்க -  குழாயினுள் வைக்கப்படும் ஒரு 
          உபகரணம்).
         ===============================================================
               நமது சங்கம், தோழர். குப்தா அவர்களின் முயற்சியின் காரணமாக 
               பெற்றிட்ட " MRS திட்டம் " எப்படியெல்லாம் நீர்துப்போய் விட்டது -  
               பார்த்திர்களா?  அங்கீகாரத்தில் உள்ளோர் இதைப்பற்றி ஏதேனும் 
              கவலை கொள்வார்களா    இல்லை NFTE -  சங்கத்தை வசைமாரிப் 
               பொழிவதிலே காலத்தை கழிப்பார்களா? 
         ================================================================




              



Friday, February 4, 2011


Committee formed to examine the VRS scheme


A committee is formed by the corporate office to examine Voluntary Retirement scheme for Select categories and to make recommendations on this issue.  This Committee consists of four high lever officers. 

(No 4-5/2010-Restructuring dated 01/02/2011)

Thursday, February 3, 2011

Tamil Nadu Final Vote Details

eSl    SSA                                     NFTE                        BSNLEU
1.   Karaikudi.                               315                             97
2.   Nilgris                                       56                            229
3.   Pondy                                      172                            170
4.   Dharmapuri                            58                              349
5.   Kumbakonam                        450                             131
6.   Erode                                       512                           574
7.   Viridunagar                             270                           303
8.   Nagarkoil                                133                           324
9.   Cuddalore                                676                           320
10  Thirunelveli                             457                           358
11. Tutucorin                                 190                           266
12. Vellore                                     826                           378
13. Trichy                                       867                          453
14. Tanjore                                    654                           160
15. Chennai (Misc)                        246                          266
16. Coimbatore                              758                        1178
17. Madurai                                   762                           992
18. Salem                                       836                           300


      Total                    8238         7148

Wednesday, February 2, 2011

ஊருக்கு தாண்டி உபதேசம்..உனக்கும் எனக்கும் இல்லை!

RK Agarwal, Director (Consumer Mobility), Bharat Sanchar Nigam Limited (BSNL), தன்னுடைய மகளின் திருமணத்தை லக்னோவில் January 23, 2011 அன்று நடத்தினார். கிட்டத்தட்ட 18  BSNL members இத்திருமண்த்தில் கலந்துககொண்டனர். இதில் என்ன பிரச்சினை என்கிறிர்களா? 
இதில் கலந்துகொண்ட அதிகாரிகள் அனைவரும் அரசு செலவில் திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது தான். இதற்காக 20 இலட்சம் ரூபாய் செலவில் " அலிகஞ்"  பயணர் விடுதி மாற்றியமைக்கப்பட்டது.  இந்த விடுதிகள் 21- ஜனவரி முதல்24 வரை இவர்களுக்கு "மீட்டிங்க்" என்ற பெயரில் புக் செய்யப்பட்டது. "மேல் மட்ட அதிகாரிகளின்"  உறவினர்கள்-குழந்தைகள் திருமணத்திற்காக நாட்டின் எந்த மூலையிலும் "TOP BSNL  மேனேஜ்மென்ட்  மீட்டிங்" என்ற காரணத்தின்  பேரில் - முழுவதுமாக BSNL செலவில் - ஏற்பாடு செய்யப்படுவது ஒன்றும் புதிய விஷயமில்லை.  ஆணால் நமது நிறுவனம் நலிவடைந்து சின்னா பின்னமாகி வரும் இந்த நாட்களில் கூட,  முன்னுதாரண்மா நடந்து காட்டவேண்டிய மேல்மட்ட 
நிர்வாகம், இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட்டு வருவது  மாற்றப்பட 
வேண்டும்.  துவக்கமாக,  மிக உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் IQ புக் 
செய்யும் விவரங்கள்,  முழுமையாக ஒளிவு-மறைவற்ற முறையில் 
தெரிவிக்கப்பட வேண்டும் என்ற் முறையினை அமுல் படுத்தப்பட  வேண்டும்..................................
(நன்றி:  SNEA வலைத்தளம்.)


நன்றி!!

தோழர்களே!  தோழியர்களே!  


கடலூர் மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.


வாக்களித்த அத்துணைத் தோழர்களுக்கும் நெஞ்சு  நிறை நன்றிகள்!
அமைதியாகவும் சிறப்பாகவும் தேர்தல் நடத்துவதற்கு உதவிய 
நிர்வாகத்திற்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகள்!


நமக்காக வாக்குகள் சேகரித்த "அனைத்து" தோழமை நெஞ்சங்களுக்கும் 
எங்களது நன்றிகள்.


அல்லும் பகலும் அயராது தேனீக்கள் போல பணியாற்றிய அனைத்து 
தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் , இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் அயராது பணியாற்றிய தோழர் பக்கிரி போன்ற "இளைஞர்களுக்கும்" 
எங்களது நன்றிகளை உரித்தாக்குகிறோம். 

Tuesday, February 1, 2011

என்ன தவம் செய்திட்டோம்!

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை! கண்கள் பனிக்கின்றன! 
 இத்தோழர்களை என்னவென்று அழைப்பது? 
ஆயிரமாயிரம் கோடி வந்தனங்கள் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் 
சொல்லத் தோன்றவில்லையே!!
 "நன்றி" என்ற வார்த்தை போதாமல் போய், எங்களது உள்ளத்தில் ஏற்படும் 
உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளியிட வார்த்தை இன்றி தவிக்கிறோம்!! 
 யாரைச் சொல்ல?   என்னவென்று சொல்ல?


மிகக் கடுமையான விபத்தில் சிக்கி சொந்த மகளின் திருமணத்திற்குக் கூட 
போகமுடியாது- உடல் முழுதும் கட்டுக்களோடு படுக்கையில் கிடக்கும் 
நிலையிலும் "ஆம்புலன்ஸில்"  வந்து வாக்களித்த எங்களருமைத்
தோழியர் மீனாவையா?


பம்பரமாய் சுழன்று பணியாற்றி, தேர்தலுக்கு முதல்நாள் விபத்தில் அடிபட்டு
கால் எலும்பு முறிந்து, மருத்துவ மனையில் கிடந்த நிலையிலும்
வாக்களித்த உயிர்த்தோழர் சங்கராபுரம் கணேசனையா?


அம்மை நோய்கண்டு வெளியே வரக்கூடாத நிலையிலும்
நமக்காக வந்து வாக்களித்த கடலூர் தோழர் ரங்கனாதனையா?


இருதய நோயால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை ஆஸ்பத்திரியிலிருந்து
 வாக்களிப்பதற்காகவே செஞ்சிக்கு வந்த தோழர் எல்லப்பனையா?


சென்னை "மியாட்" டிலிருந்து வாக்களிப்பதற்காகவே முன்னதாகவே
"டிஸ்சார்ஜ்" கேட்டுப்பெற்று வந்த விருத்தாஜலம் தோழர் பன்னீர் செல்வத்தையா?


மிகக்கடுமையான - மன இறுக்கமான குடும்பச்சூழ்நிலையிலும் 
வாக்களிப்பதற்காகவே "நாகர்கோவிலிலுருந்து" திண்டிவனம் வந்த 
தோழர் சுரேஷையா?


தாயாருடன் மருத்துவமனையில் உடன் இருக்க வேண்டிய நிலையிலும்
வாக்களிக்க வந்த விருத்தாஜலம் தோழியர் சுகன்யாவையா?


யாரைசொல்ல ..
இன்னும் துயரங்களையெல்லாம் வெளிக்காட்டாது மனதிற்குள்ளேயே இருத்தி
பணி செய்திட்ட தோழமை நெஞ்சங்களுக்கெல்லாம் என்னவென்று நன்றி சொல்ல! 
வார்த்தை இன்றி தவிக்கிறோம்!!


நீங்கள் தாம் இயக்கத்தின் வேர்கள்!
உங்களது நம்பிக்கைதான் சங்கத்தின் உயிர்மூச்சு!


வணங்குகிறோம்.!