.

Monday, August 29, 2011

VRS-27/08/2011


VRS குறித்து BSNL அனுப்பிய திட்டங்களை DOT நிராகரித்துள்ளது.
இத்திட்டங்களால் 21,000 ஊழியர்களை மட்டுமே குறைக்க முடியும்.
ஆகவே இது போதாது.  ஒரு லட்சம் ஊழியர்களை குறைக்க வேண்டும் என்று 
DOT தெரிவித்துள்ளது. மேல் விபரங்களுக்கு: இங்கே சொடுக்கவும்


Print Page

Saturday, August 27, 2011

NFTE writes to CMD with regard to NE12


        No.TF—26/6                                         Dated 27/8/2011


        Subject: - Upgradation of employees to NE 12 scale as per NEPP. 
                                     -o-


        Dear Shri Upadhyayjee, 
              
        In continuation  & our letter No. TF 26/6 date 18/5/2011 we wish to draw your kind 
        attention towards enormous delay in creation of NE-12 scale as envisaged in NEPP. The
        DPE/DOT has approved the scale in for creation in November/December 2010. 
       
        The upgradation of employees to NE 12 scale is prospective. In the situation you will agree, sir, 
        that delay in creation is putting the employees in disadvantageous position beyond description. 
        The hundreads of senior employees are retiring every month with immortal financial loss. 


        We, therefore, impress upon you to please intervene into the matter so that the settlement of the
        issue is hastened and creation of hurdles are stopped 


        With deep regards. 


                                                                                        Yours sincerely, 
                                                                                     (Chandeshwar Singh) 
                                                                                      General Secretary 
To:

        Shri R.K.Upadhyay 
        Chairman-cum-Managing Director 
        B.S.N.L 
        New Delhi 


Print Page

Friday, August 26, 2011

MTNL-ல் VRS திட்டம் பற்றி ராஜ்ய சபாவில் கேள்வி....


விணா எண்:  1443:  பதிலளிக்கப்பட்ட நாள் : 12.08.2011:   SHRI S. THANGAVELU


ராஜ்ய சபாவில் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும்:


விணா:


1. MTNL, தனது 1/3 பங்கு உழியர்களுக்கு (15000 பேர்), விருப்ப ஓய்வு அளிப்பது குறித்து ஏதேனும் திட்டத்தினை, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதா?  அந்த திட்டத்திற்கு MTNL Board ஒப்புதல் அளித்துள்ளதா? இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அரசிடம் ரூ.3000 கோடி கேட்டுள்ளதா? இதில் அரசின் நிலைபாடு என்ன? 


பதில்:THE MINISTER OF STATE IN THE MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY ( SHRI MILIND DEORA)


MTNL, சில குறிப்பிட்ட கேடர்களுக்கு VRS  திட்டத்தினை அமுலாக்கு வதற்காக,  போர்டின் ஒப்புதலுடன், 100% பொருளா தார உதவியினை கோரியுள்ளது.


திட்ட விபரம்:  VRS திட்டத்தில் செல்வோருக்கு ஈட்டு தொகையாக, பணி நிறைவடைந்த ஒவ்வொரு ஆண்டிற்கும் அல்லது மீதி இருக்கும் ஒவ் வொரு ஆண்டிற்கும், 60 நாட்கள் வீதம் ஊதியம் ((Basic pay +DA)- இதில் எது குறைவோ அது.  ஆனால், இந்த ஈட்டுத் தொகை 60 மாத சம்பளத்திற்கு மிகக் கூடாது. 


19,000 தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்திற்கு, ரூ.3610 கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. 


இத்தொகையினை, வங்கிகள், வெளி மார்க்கட் மூலம் திரட்ட முடியுமா என ஆராயுமாறு MTNL, கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. 


Print Page

G S M FIGURES - JULY 2011

Thursday, August 25, 2011

BSNL to rope in staff family members to boost sales


In a bid to increase its revenes, state-run telecom major BSNL is launching a scheme under which family members of its 2.9 lakh employees can sell mobile recharge coupons as direct selling agents for a commission of 4.5 per cent, a senior company official said.

Even if the spouse or children of at least two lakhemployees chose to become selling agents, it would result in a big boost to the company''s revenues, BSNL Coimbatore Principal General Manager N Haribabu told reporters here.

Initially the scheme would cover only recharge coupons and would be expanded to cover SIM cards and other BSNL products in a phased manner, he said adding PAN card was a must for those wanting to become selling agents.

The move comes at a time when BSNL's market share has dropped from 18.98 per cent in March 2009 to 13.37 per cent till June 30, 2011. Besides it had also incurred a loss of Rs 1,823 crore for 2009-10 and sought financial assistance from Department of Telecom to operate commercially unviable services.

Haribabu said BSNL was also taking steps to make available recharge coupons round-the-clock through all telephone exchanges across the Country and the security staff would be asked to look after the sales during night hours.

Stating that these schemes had already been implemented on a pilot basis in some telecom circles, he said they would be introduced in Coimbatore circle next week.

On performance of Coimbatore Circle, Haribabu said it clocked 10 per cent increase in the revenue in the first four months of this fiscal at Rs.74 crore as against Rs.68 crore earned during the corresponding period last year.
(source: http://www.telecomtiger.com/
Print Page

Tuesday, August 23, 2011

NFTE, Tamilnadu Circle Union's call:

 All our Branches are called upon to hold Demonstrations on 24.08.2011 demanding a strong Lokpal bill. NFTE BSNL supports Anna Hazare’s Movement against corruption. There is corruption in BSNL beyond description. Actually Anna Hazare is needed in BSNL. If corruption is eradicated the Company’s Financial health will be strong and viable.
Print Page

Saturday, August 20, 2011

ஜன் லோக் பால்


மத்திய அரசு சொல்லும் "லோக்பால் (LP)"  மசோதாவுக்கும்- அன்னா ஹசாரேயின் லோக்பால்(JLP) மசோதாவுக்கும் என்னதான் வித்தியாசம்? 

1. லோக்பாலின் அதிகார வரம்பு:


அரசு:  பதவியில் இருக்கும் பிரதமர், நீதித்துறையினர்,குரூப் 'A' அதி காரிகளுக்கு கீழே உள்ளவர்கள் லோக்பால் வரம்புக்குள் வரமாட்டார்கள் .


அன்னா:  பிரதமர், நீதித்துறையினர், அரசு அதிகாரிகள்/ஊழியர்கள் என அனைவரும் லோக்பால் பரிசீலனை வரம்பிற்குள் வரவேண்டும்


2. லோக்பால் குழு:


அரசு: லோக்பால் குழுவில் தலைவர் தவிர அதிக பட்சம் 8 பேர் இருப்பர். அதில் பாதிஉறுப்பினர்கள், நீதித்துறை பின்னனி உள்ளவர்களாக இருப்பர்.


அன்னா: தலைவரைத் தவிர 10 பேர் இருக்க வேண்டும். அதில் 4 பேர் நீதித் துறை பின்னனியாக இருக்க வேண்டும்.


3.  இந்த குழுவினைத் தேர்வு செய்வது எப்படி:


அரசு:  லோக்பால் உறுப்பினர்களை தெரிவு செய்யும் கமிட்டியில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இருவர், இரு உயர் நீதி மன்ற தலைமை நீதிபதிகள், தலைமை தேர்தல் ஆணையர், CAG மற்றும் சென்ற லோக்பால் கமிட்டியின் தலைவர்.


அன்னா: பத்து உறுப்பினர்களில் ஐவர், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் அல்லது, தலைமை தேர்தல் அதிகாரி அல்லது 'CAG'. மீதி உறுப்பினர்கள் பொதுமக்களிடமிருந்து.


4.  உறுப்பினருக்கு தகுதி:


அரசு: நீதித்துறையிலிருந்து வரும் உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி யாகவோ அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ இருந் திருக்க வேண்டும். இது தவிர, ஊழல் எதிர்ப்பு கொள்கையிலோ,பொது நிர்வாகத்திலோ,vigilanace or finance -ல் 25 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


அன்னா: நீதித்துறையிலிருந்து வரும் உறுப்பினர்கள்10 வருடம் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது உச்ச நீதி மன்றத்தில் 15 வருடம் வக்கீலாக இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். 




5.  லோக்பால் உறுப்பினர் தகுதி நீக்கம்:


அரசு: குடியரசுத்தலைவர் தானாகவோ அல்லது 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொழுத்திட்டு கொடுத்தாலோ, அல்லது யவரேனும் குடிமக்கள் மனு கொடுத்து, அந்த மனுவின் பேரில் திருப்தி அடைந் தாலோ,  உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்பி, பின் பதிவி நீக்கம் செய்யலாம். 


அன்னா:  பொதுமக்களில் யார் வேண்டுமானாலும், சுப்ரீம் கோர்ட்டில் மனுகொடுத்து, அந்த மனுவில் உண்மை யிருக்குமானால், குடியரசுத் தலைவருக்கு, அந்த உறுப்பினர பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கலாம்.




6. எதைப்பற்றி விசாரிக்கலாம்:


அரசு: லஞ்ச தடுப்பு விதிகளின் கீழ் வரும் விஷயங்களை மட்டும் விசாரிக்கலாம்.


அன்னா: மேற்சொன்னதைத் தவிர, குற்றவியல் சட்டத்தினை மீறுப வர்கள், ஒழுங்கீனாமாக நடந்து கொள்பவர்கள், குடிமக்களின் உரிமை களை மீறுபவர்கள் என பலரும் இந்த மசோதாவின் கீழ் வருவார்கள். (Violation of Indian Penal Code, victimization of whistleblowers and repeated violation of citizen's charter). 


7. விசாரணை:


அரசு: லோக்பால் அமைப்பில், விசாரணைப் பிரிவு தனியாக இருக்கும்


அன்னா: CBI அமைப்பே, லோக்பால் கீழ் விசாரண நடத்தும். (CBI will be under the Lok Pal while investigating corruption cases)


8. விசாரணை அமைப்பு: 


அரசு: அரசாங்கமே லோக்பால் அமைப்பிற்கு prosecution wing அமைத்து தரும்.


அன்னா: The CBI's  prosecution wing will conduct this function.


9. வழக்கு: 


அரசு: சிறப்பு நீதிமன்றத்தில் லோக்பால் அமைப்பு வழக்கு தொடுக்கும். முன் அனுமதி தேவையில்லை.


அன்னா: பிரதம,மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உச்ச/உயர் நீதிமன்ற நீதிபதிகள்ர் உட்பட எவர் மீதும் லோக்பால் அமைப்பினரே 7-க் கும் மேற்பட்ட உறுப்பினரின் அனுமதியின் பேரில் வழக்கு தொடுக்கலாம்.


10. இதர:


அன்னா: ஊழல் குற்றச்சாட்டைத்தவிர, குடிமக்களின் குறைகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கலாம்.


அரசு:  அப்படிப்பட்ட அதிகாரம் லோக்பாலுக்கு இல்லை.



Monday, August 15, 2011

ஹசாரேவுக்கு அனுமதி மறுப்பு!!

மத்திய அரசு, தில்லி போலீஸ் மூலம், "அன்னா ஹசாரேவுக்கு" வுக்கு

Friday, August 12, 2011

அமெரிக்க பொருளாதரத்தில் என்ன நடக்கிறது?

கடந்த சில நாட்களாக, அமெரிக்கா, கடன், கிரெடிட் ரேட்டிங் போன்ற சில வார்த்தைகளை பேப்பர்களிலும் டி.வி யிலும் கேட்டிருப்போம்.  அப்படி என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்?

அமெரிக்கா தனது வேர்களை ஆழமாக உலகெங்கும் எத்தனை பலமாக பரப்பியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு வாய்ப்பு. 

அமெரிக்காவின் கடன் தர வரிசையை (credit rating) உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டான்டர்ட் அண்ட் புவர் குறைத்துவிட்டது. கிட்டத்தட்ட கடந்த 70 ஆண்டுகளாக அமெரிக்காவின கடன் தர வரிசை ‘AAA’ என்ற அதி உயர் தரத்தில் இருந்தது. அதுஎன்ன கடன் தர வரிசை?

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பாங்கு மற்றும் திறன்,  "கடன் தர வரிசை" என்று சொல்லப்படுகிறது. கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவது, வாங்கிய கடனுக்கு மிகச் சிறந்த வட்டியைத் தருவது, கடனை மிகச் சரியான திட்டங்களுக்கு பயன்படுத்துவது என அமெரிக்கா எல்லா விதத்திலும் AAA என்ற அதி உச்ச நிலையில் இருந்தது அமெரிக்கா, இதுநாள் வரை.

இதனால் உலக நாடுகளும், சர்வதேச வங்கிகளும், சர்வதேச நிதி அமைப்புகளும், பெரும் நிறுவனங்களும் தங்களது பணத்தை அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்வதையே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதி பணத்தை முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக சீனா போன்ற நாடுகள், கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளன.

ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அமெரிக்கா புதிய நெருக்கடியில் சிக்கியது. அதாவது அந்த நாடு எவ்வளவு கடன் வாங்கலாம் என அந் நாட்டு நாடாளுமன்றம் நிர்ணயித்த அளவை தொட்டுவிடும் அளவுக்கு வந்துவிட்டது நிலைமை.அதாவது இந்த அளவை தாண்டிவிட்டால் புதிய கடன் வாங்குவது சிக்கலாகிவிடும். எனவே அளவை உயர்த்த வேண்டும், அல்லது கடனே வாங்கக் கூடாது. இரண்டாவது சாத்தியமில்லாத சமாச்சாரம்.

அமெரிக்காவின் கடன் அளவு 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அளவை கடந்த 2ம் தேதியே அமெரிக்கா தொட்டுவிட்டது. இதனால் கடன் அளவை உடனடியாக உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா தள்ளப்பட்டார். ஆனால், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கே பெரும்பான்மை இருந்ததால், அங்கு அதற்கான தீர்மானத்தை ஒபாவால் நிறைவேற்ற முடியவில்லை.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், குடியரசுக் கட்சியினரை தாஜா செய்ய வேண்டிய நிலை. 2ம் தேதிக்குள் கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது, மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

ஒருவழியாக ஆகஸ்ட் 1ம் தேதி குடியரசுக் கட்சியினர் சமரசமாகி, மேலும் 2.5 டிரில்லியன் வரை கடன் வாங்கும் அளவை உயர்த்த ஒப்புக் கொண்டனர். ஒரு தற்காலிக நிம்மதி அமெரிக்காவுக்கு. ஆனால் புதிதாக முளைத்துள்ள பிரச்சினை கொஞ்சமல்ல…

உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கும் ஒரு வல்லரசு நாடு, தனது செலவுத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் கூட முறைப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதை சர்வதேச நிதி அமைப்புகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.ஒருவேளை குடியரசுக் கட்சியினர் விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால்.. கடந்த 3ம் தேதி முதல் அமெரிக்கா, பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும். அதாவது அந்த நாட்டில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை அங்கிருந்து எடுக்க ஆரம்பித்திருப்பர். அது நடந்திருந்தால், அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சீட்டு மாளிகை மாதிரி சரிந்திருக்கும்.

இதனால்தான் ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் அமைப்பு, அமெரிக்காவின் தரத்தை AAAவில் இருந்து AA+ என்ற நிலைக்கு தரம் குறைத்துவிட்டது. இனி ஏகபோகமாக அதிகாரம் செலுத்த முடியாது அமெரிக்காவால். கடன் கொடு என இத்தனை காலம் அதிகாரமாய் கேட்டு வந்த அமெரிக்கா, இனி கெஞ்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை இந்த தர வரிசை இறக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டதையடுத்து, உலக நாடுகள் முழுவதுமே பயம் பரவிவிட்டது. 

இதன் விளைவுதான் உலக பங்குச் சந்தைகளில் பெரும் சறுக்கல்கள் தொடர்கின்றன. இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் தொடர்ந்து சறுக்கின. இன்னமும் அந்த சறுக்கல் தொடர்ந்தது.

அது ஏன் அமெரிக்காவில் தேள் கொட்டினால் இந்தியாவில் நெறி கட்டுகிறது? பணம் தான்.  அமெரிக்கா மூலம் அவ்வளவு வருமானம் ஆசிய நாடுகளுக்கு. இந்த நாடுகளைத்தானே அமெரிக்கா பல விஷயங்களுக்கு நம்பி இருக்கிறது. கொஞ்சம் பச்சையாக சொன்னால், முதலாளி சறுக்கி விழுந்தால் கூலிகளின் நிலைமை என்னாகும்… அதேதான் இப்போது நடக்கிறது!

இந்த பாதிப்பு தனி நபர்கள், நிறுவனங்களோடு நின்றுவிடுவதில்லை. இவற்றின் தாக்கம் தேசத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தின் மீதும் இருக்கும் என்பதே உண்மை. பங்குச் சந்தைகள் இப்படி சரிந்து கிடப்பதால், இப்போதைக்கு எல்லோருமே தங்கத்தில் முதலீடு செய்யக் கூடும். எனவே இன்னும் சில மாதங்கள் - வருடங்களுக்கு வரலாறு காணாத விலை உயர்வு என தங்கம் பற்றி செய்தி படித்துக் கொண்டிருக்க வேண்டி வரலாம்! எனவே இப்போது நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அமெரிக்கா நல்லாயிருக்கணும் என்று பிரார்த்திக்க வேண்டிய நிலைமை வந்திருக்கிறது!

பொருளாதர ரீதியில் மிக வலுவான நாடாக மாறிவரும் 'சீனா' அமெரிக்காவை அதட்டிப் பார்க்கிறது.  "கொஞ்சம் 'காமன் சென்ஸை' உபயோகப்படுத்துங்கள், உங்களது நாட்டிற்கு கடன் கொடுத்தவர்களின் நலனைக் காப்பது அவசியம் "  என உபதேசிக்கிறது. ஏனெனில் 2 டிரில்லியனுக்கு மேல் சீனா முதலீடு செய்துள்ளதே!

இந்தியாவும் சில பில்லியன்களை முதலிடு செய்துள்ளது!

நமது 'செயல்படும்' பிரதமர் 'மன்மோகன்' என்ன சொல்கிறார்?  
எப்போதும் போல 'நிலைமையை உன்னிப்பாக கவனிப்பார்'.  
இல்லாவிடில் 'எனக்கு எதுவும் தெரியாது, நிதி அமைச்சரைக் கேட்க வேண்டும்' என்பார். சோனியா வேறு ஊரில் இல்லை!  
                                                               -0-

Print Page

Monday, August 1, 2011

VRS ஒரு ஆய்வு

                                          விருப்ப ஓய்வு - ஒரு ஆய்வு